இந்திரா, ராஜீவ் ஆகியோரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா குறிப்பிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் சனிக்கிழமை நடந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
தேர்தல் வந்தால் மட்டுமே இங்கு சிலருக்கு தேசபக்தியும் வருகிறது. ஆனால், அவர்கள் இந்த நாட்டுக்காக செய்தது என்ன? வேலைவாய்ப்பு எங்கே? விவசாயிகளின் நலன் எங்கே? பெண்களின் பாதுகாப்பு எங்கே?
தேர்ந்தெடுத்த தேசப்பற்று வேண்டாம். பாஜக-வினர் உண்மையிலேயே தேசபக்தி கொண்டவர்கள் என்றால் முன்னாள் பிரதமர்கள் இந்திரா மற்றும் ராஜீவ் ஆகியோரையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். ஹிந்து, முஸ்லிம் மட்டுமல்லாது எதிர்கட்சித் தலைவரின் தந்தை என நாட்டுக்காக சேவையாற்றிய அனைவரையும் பாகுபாடு இல்லாமல் மதிக்க வேண்டும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கறுப்பு பணத்தை மீட்டு வருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். அந்த கறுப்பு பணம் எங்கே? இதுவரை ஒரு பைசாவை கூட கண்ணில் காட்டவில்லை.
இந்த தேர்தல் மிக முக்கியமானது. ஏனென்றால் இது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியது. கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசின் செயல்பாடுகள் நாம் அனைவரும் நன்கு அறிந்ததுதான். எனவே சிந்தித்து வாக்களியுங்கள் என்று பாஜக-வை கடுமையாக விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்தே எழுதப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |

டிராக்டர் விற்பனை 23% உயர்வு: டாபே

அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


