வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: மறுதேர்தல் நடத்தக் கோரி சந்திரபாபு நாயுடு கடிதம்

ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை என்பதால் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: மறுதேர்தல் நடத்தக் கோரி சந்திரபாபு நாயுடு கடிதம்


ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை என்பதால் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன், பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், குடும்பத்துடன் சென்று வாக்கினை செலுத்திவிட்டுத் திரும்பிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை. ஏராளமான வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். கொளுத்தும் வெயிலில், வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்ற வாக்காளர்கள் ஒருபோதும் திரும்பி வந்து வாக்களிக்க மாட்டார்கள். எனவே வாக்குப் பதிவு சதவீதம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வாக்குப்பதிவில் கோளாறு உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டியது அவசியமாகிறது.

காலை 9.30 மணி வரை சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்காத நிலையில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com