மேகாலயாவில் இன்று நடைபெற்று வரும் மக்களவைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், அதிகாலையிலேயே சென்று முதலில் வாக்களித்த 5 வாக்காளர்களுக்கு பதக்கம் வழங்கி கொளரவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
17-வது மக்களவைக்கான 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல்கட்டமாக 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 91 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மேகாலயா மாநிலம் மேற்கு காசி கில்ஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சரியாக 7 மணிக்கு சென்று முதலில் வாக்களித்த 5 வாக்காளர்களுக்கு சிறப்பு மரியாதையும், பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
வாக்காளர்கள் உற்சாகத்துடன் வந்து தங்களது கடமையை பதிவு செய்வதற்காக வாக்காளர்களை மலர் தூவியும், மேளதாளங்கள் முழங்கியும், பதக்கங்களையும் வழங்கி கெளரவித்தும் வாக்காளர்களை கவர்ந்து வருகிறது தேர்தல் ஆணையம்.