மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள்:  சீறிய உச்ச நீதிமன்றம் 

நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள் என்று அயோத்தியில் பூஜை நடத்த அனுமதி கோரிய மனுதாரரிடம்  உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது.

News image
Updated On :12 ஏப்ரல் 2019, 6:44 pm IST

புது தில்லி: நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள் என்று அயோத்தியில் பூஜை நடத்த அனுமதி கோரிய மனுதாரரிடம்  உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது.

சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக மூவர் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள் என்று அயோத்தியில் பூஜை நடத்த அனுமதி கோரிய மனுதாரரிடம்  உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியைத் தவிர மீதமுள்ள 67.7 ஏக்கர் நிலத்தில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

வெள்ளியன்று அந்த மனுவானது பரிசீலனைக்கு வந்தபோது அதனை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம், “நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள்; யாரையாவது சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று கோபத்துடன் தெரிவித்தது.  

அத்துடன் இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு ஏற்கனவே அலகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த ரூ. 5 லட்சம் அபராதத்தை திரும்பப்பெறவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.