புது தில்லி: நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள் என்று அயோத்தியில் பூஜை நடத்த அனுமதி கோரிய மனுதாரரிடம் உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது.
சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக மூவர் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள் என்று அயோத்தியில் பூஜை நடத்த அனுமதி கோரிய மனுதாரரிடம் உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியைத் தவிர மீதமுள்ள 67.7 ஏக்கர் நிலத்தில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
வெள்ளியன்று அந்த மனுவானது பரிசீலனைக்கு வந்தபோது அதனை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம், “நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள்; யாரையாவது சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று கோபத்துடன் தெரிவித்தது.
அத்துடன் இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு ஏற்கனவே அலகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த ரூ. 5 லட்சம் அபராதத்தை திரும்பப்பெறவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


