இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குடும்ப அரசியல் வேண்டாம்: பதவியை ராஜிநாமா செய்த மத்திய அமைச்சர் 

தனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டதைத் தொடந்து, குடும்ப அரசியல் வேண்டாம் என்று கூறி மத்திய அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.     

News image
Updated On :14 ஏப்ரல் 2019, 1:50 pm

DIN

ஹரியாணா: தனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டதைத் தொடந்து, குடும்ப அரசியல் வேண்டாம் என்று கூறி மத்திய அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.     

ஹரியாணாவைச்ச சேர்ந்தவர் வீரேந்திர சிங். 40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்த அவர் 2014-ல்தான் பாஜகவில் இணைந்தார்.

பின்னர் உடனடியாக 2014-ல் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர் அவர் துறை மாற்றப்பட்டது. 2016-ல் இரும்பு எஃகு துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டதைத் தொடந்து, குடும்ப அரசியல் வேண்டாம் என்று கூறி வீரேந்திர சிங் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.     

இதுகுறித்து ஹரியாணாவில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிறன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் ஹரியாணா மாநிலத்தில் ஹிசார் தொகுதியில் பாஜக சார்பாகப் போட்டியிட என் மகனுக்கு சீட் கிடைத்துள்ளது. எனவே எனது மத்திய அமைச்சர் பதவி மற்றும்  எம்.பி.பதவிகளை ராஜிநாமா செய்கிறேன்.

எனது ராஜினாமா பாஜக தலைவர் அமித் ஷாவுக்குத் தெரிவித்துவிட்டேன். குடும்ப அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டின் அடிப்படையில் இம்முடிவை எடுத்துள்ளதையும் அவருக்குத் தெரிப்படுத்தியுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.