இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீதித்துறையின் சுதந்திரத்தன்மையை இந்தப் புகார் சோதித்துள்ளது. தற்போதைய நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை, தலைமை நீதிபதி ஏற்கெனவே அமைத்துள்ளார். வழக்குரைஞர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், அமைதியைக் குலைக்கக்கூடிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில், சாட்சிகள் அழிக்கப்படாமல் இருக்க, வழக்குரைஞருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியதும் அவசியம். அவர் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை வியாழக்கிழமை (ஏப். 25) காலைக்குள் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அது கையில் எழுதப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும்; தட்டச்சு செய்ததாக இருக்கக் கூடாது.