தனது ஹிந்து நண்பர்களுடன் கன்வார் யாத்திரையில் கலந்துகொண்டு ஹரித்துவாரில் இருந்து கங்கை புனித நீரை எடுத்து வந்ததற்காக முஸ்லிம் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
பாக்பாத் கிராமத்தைச் சேர்ந்த இர்ஷத், கன்வர் யாத்திரையை முடித்துக்கொண்டு தனது கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று கங்கை புனித நீரைக் கொண்டு பூஜை செய்ய சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அங்குள்ள காவல்நிலையத்தில் இர்ஷத் புகார் அளித்தார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஹரித்துவார் புனித யாத்திரை முடித்துக்கொண்டு கங்கை புனித நீரை எடுத்து வந்தது முஸ்லிம் மதத்துக்கு எதிரானது எனக் கூறி பரௌட் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்களால் நானும் எனது குடும்பத்தினரும் தாக்கப்பட்டோம். இதில் எனது தந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இர்ஷத் கடந்த சில காலங்களாவே இந்த யாத்திரையில் பங்கு பெற்று வருவதாக பாக்பாத் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


