"அங்கு நிலவும் உண்மையான சூழல் குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. இயல்பு நிலை திரும்புவதற்கு சற்று நேரம் வழங்க வேண்டும். காஷ்மீர் சூழலை மத்திய அரசு தினந்தோறும் கண்காணித்து வருகிறது. இயல்பு நிலைக்கு கொண்டுவருவது அரசு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளாகும். ஒருவேளை ஜம்மு காஷ்மீரில் ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு. அதனால், இயல்பு நிலையை கொண்டுவருவதற்கான நியாயமான நேரத்தை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்" என்றனர். மேலும் மனுதாரரின் வழக்கறிஞரான மேனகா குருசாமியிடம், "நீங்கள் ஏதேனும் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டால், அது குறித்து தீர்வு காண அறிவுறுத்துவோம்" என்றனர். இதையடுத்து, அட்டர்னி ஜெனரலிடம், "இயல்பு நிலைக்கு கொண்டுவர மத்திய அரசுக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்" என்று கேள்வி எழுப்பினர்.