அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விநோத விபத்தால் மின்சாரம் தாக்கி ஐந்து மாணவர்கள் உயிரிழந்த பரிதாபம் 

கர்நாடகாவின் கோப்பல் நகரில் உள்ள உறைவிடப் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த விநோத விபத்தால் மின்சாரம் தாக்கி ஐந்து மாணவர்கள் உயிரிழந்த பரிதாபம் நிகழந்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:51 am

IANS

கோப்பல்: கர்நாடகாவின் கோப்பல் நகரில் உள்ள உறைவிடப் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த விநோத விபத்தால் மின்சாரம் தாக்கி ஐந்து மாணவர்கள் உயிரிழந்த பரிதாபம் நிகழந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம் கோப்பல். அங்கு மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் தேவராஜ் அர்ஸ் கிங் உறைவிடப் பள்ளியில்தான் விபரீதம் நடந்துள்ளது.

இந்தப் பள்ளியில் சுதநதிர தினத்திற்காக கட்டட மேற்கூரையில் கொடியேற்றும் பொருட்டு 15 அடி உயர இரும்புத் தடி ஒன்று, சேறு நிரம்பிய ட்ரம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்தது. ஞாயிறன்று அந்த இரும்புத் தடியை அகற்றும் பணியில் அங்கு விடுதியில் தங்கிப் பயின்ற ஐந்து மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த இரும்புத் தடியானது, விடுதிக்கு கட்டடத்தின் மேலே செல்லும், 11 கிலோ வாட் மின்கம்பியின் மீது உரசியது. இதனால் மின்சாரத்தால் தாக்கப்பட்டு ஐந்து மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்த மாணவர்கள் மல்லிகார்ஜு ன், பசவராஜ், தேவராஜ், கணேஷ் மற்றும் குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கவனக்குறைவினால் நிகழ்ந்த விபத்து என்று குற்றம் சாட்டி அந்த விடுதியின் காப்பாளர், கட்டட உரிமையாளர் மற்றும் மின்துறை அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த மாநில முதல்வர் எடியூரப்பா, விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டதோடு, இறந்த மாணவர்களது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.