விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

75 வயது ஆகி விட்டது: பதவியை ராஜிநாமா செய்த மாநில அமைச்சர் 

தனக்கு 75 வயது ஆகி விட்டதால் உத்தரப்பிரதேச மாநில நிதி அமைச்சர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ள சம்பவம் நிகழநதுள்ளது.    

News image
Updated On :20 ஆகஸ்ட் 2019, 11:57 am

IANS

லக்னௌ: தனக்கு 75 வயது ஆகி விட்டதால் உத்தரப்பிரதேச மாநில நிதி அமைச்சர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ள சம்பவம் நிகழநதுள்ளது.    

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநித்தின் நிதியமைச்சராக இருப்பவர் ராஜேஷ் அகர்வால். இவர் சமீபத்தில் தனது 75-ஆவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.

இந்நிலையில் ராஜேஷ் அகர்வால் செவ்வாயன்று தனது நிதி அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தனது ராஜிநாமா கடிதத்தை முதலவர் யோகிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

75 வயதைத் தாண்டியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதில்லை என்ற பாஜகவின் முடிவுக்கு ஏற்பவவே அவர் ராஜிநாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் தனது உடல்நிலையயும் அவர் ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 25 வருடங்களாக உ.பி மாநில சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் ராஜேஷ் அகர்வால், கடந்த 2003- 2007 காலகட்டத்தில் துணை சபாநாகராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.