லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்த டீ பிரேக்: சுவையான தேனீர் தயாரித்து அசத்திய விடியோ

மேற்கு வங்க மாநிலத்தின் கடற்கரையோர நகரமான திகாவுக்குச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கு சாலையோரம் இருந்த டீக்கடையில் சுவையான தேனீர் தயாரித்து அசத்தினார். இந்த விடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள

News image
Updated On :22 ஆகஸ்ட் 2019, 7:28 am

DIN


திக்கா: மேற்கு வங்க மாநிலத்தின் கடற்கரையோர நகரமான திகாவுக்குச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கு சாலையோரம் இருந்த டீக்கடையில் சுவையான தேனீர் தயாரித்து அசத்தினார். இந்த விடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக எப்போதும் சுறுசுறுப்பாக பணியாற்றி வரும் மம்தா பானர்ஜி, திகா நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வழியில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய மம்தா, அங்கிருந்த டீக்கடைக்குள் சென்று தேநீர் தயாரித்தவாறு, அங்கிருந்த உள்ளூர் மக்களிடம் பிரச்னைகளைக் கேட்டறிந்தார்.

இந்த விடியோ மம்தா பானர்ஜியின் டிவிட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. 

தேநீர் தயாரித்து அதனை மக்களுக்கும், உடன் வந்த அரசு அதிகாரிகளுக்கும் வழங்கினார். அது பற்றிய விடியோவை பகிர்ந்த மம்தா, சில நேரங்களில் சின்ன சின்ன விஷயங்கள் கூட நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. அதில், சுவையான தேநீர் தயாரித்து மற்றவர்களுக்கு பகிர்வதும் ஒன்று என்று பதிவிட்டுள்ளார்.

சமையலறையில் பணி செய்வதும், சமையல் செய்வதும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தற்போது வேலை பளு காரணமாக சமையல் செய்ய நேரமில்லை என்றும் மம்தா கூறினார்.

அந்த தேநீர் கடைக்கு வந்த பிள்ளைகளிடம் விளையாடி மகிழ்ந்த மம்தா, அவர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.