ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உத்தரப்பிரதேச பள்ளியில் தலித் மாணவர்களுக்குத் தனி வரிசையில் உணவு: மாயவாதி கடும் கண்டனம் 

உத்தரப்பிரதேச மாநில பள்ளி ஒன்றில் தலித் மாணவர்களுக்கு மட்டும் தனி வரிசையில் உணவு பரிமாறப்பட்டதற்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவாதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :29 ஆகஸ்ட் 2019, 2:40 pm

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநில பள்ளி ஒன்றில் தலித் மாணவர்களுக்கு மட்டும் தனி வரிசையில் உணவு பரிமாறப்பட்டதற்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவாதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் ராம்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள தொடக்கப் பள்ளியில்தான் மாணவர்கள் சாதிப் பிரிவினைக்கு ஆளாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இங்கு மதிய உணவின்போது தலித் மாணவர்கள் மட்டும் தனியாக அமர  வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.]

அத்துடன் பள்ளியில் தலித் மாணவர்கள் உணவு உண்பதற்காக தங்களது தட்டுகளை வீட்டிலிருந்து கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், பின்னர் தனியாக அமர வைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டுள்ளது.  இதனை  அதிகாரிகளும் கல்வித்துறை ஒப்புக்கொண்டுள்ளனர். 

குறிப்பிட்ட தொடக்கப் பள்ளி முதல்வர் பி. குப்தா பேசுகையில், உயரதிகாரிகள் ஆய்வுக்கு வந்திருந்தபோது சாதி அடிப்படையில் வேறுபாடு காட்ட வேண்டாம் என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதன்பிறகும் இங்கு இந்த நடைமுறை தொடர்கிறது" எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் தலித் மாணவர்களுக்கு மட்டும் தனி வரிசையில் உணவு பரிமாறப்பட்டதற்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவாதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பல்லியாவில் அரசுப் பள்ளியில் தலித் மாணவர்கள் தனித்தனியாக அமர்ந்து உணவு உண்ணும் செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இத்தகைய இழிவான இனவெறி பாகுபாடு காட்டுபவர்கள் மீது அரசு உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாகுபாடு காட்டும் பள்ளி அதிகாரிகள் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கை, மற்றவர்கள் பாடம் கற்கும் விதமாக அமைய வேண்டும். இனி இதுபோன்ற தவறை யாரும் செய்யக்கூடாது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.