மேற்கிந்தியத் தீவுகளுடனான டி20 தொடரில் மகேந்திர சிங் தோனியின் விக்கெட் கீப்பிங் சாதனை ஒன்றை ரிஷப் பந்த் முறியடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடரிலும் மகேந்திர சிங் தோனி சேர்க்கப்படாததால் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக செயல்படவுள்ளார்.
இதன்மூலம், இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டி20 ஆட்டங்களில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை முறியடிக்க ரிஷப் பந்த்-க்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டி20 கிரிக்கெட்:
வீரர் | விக்கெட் வீழ்ச்சி |
மகேந்திர சிங் தோனி | 5 |
தினேஷ் ராம்தின் | 5 |
ஆண்ட்ரி ஃபிளெட்சர் | 4 |
தினேஷ் கார்த்திக் | 3 |
ரிஷப் பந்த் | 3 |
மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடரின் 3 ஆட்டங்களிலும் ரிஷப் பந்த் விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பதால், தோனியின் இந்த சாதனையையும் 3 ஆட்டங்களில் முறியடிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.