திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

'குடியுரிமை மசோதாவை எதிர்த்தால் தேசத்துரோகிகள் என்று கூறுவதா?' - உத்தவ் தாக்கரே கேள்வி

உரிய திருத்தங்கள் செய்யாவிடில் மாநிலங்களவையில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு இல்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

News image
Updated On :10 டிசம்பர் 2019, 9:49 am

DIN

உரிய திருத்தங்கள் செய்யாவிடில் மாநிலங்களவையில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு இல்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்களவையில் 12 மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு திங்கள்கிழமை குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினா்களும், எதிராக 80 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.

ஆனால், இந்த மசோதா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மசோதா குறித்து பேசிய மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசும்போது, 'குடியுரிமை மசோதாவை எதிர்த்தால் அவர்களை 'தேசத்துரோகிகள்' என்று கூறுவதா? மசோதா மீது குடிமகன் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதைத் தீர்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்பின்னரே மசோதாவுக்கு சிவசேனை ஆதரவளிக்கும். 

நாட்டை தாங்கள் மட்டுமே காப்பாற்றுவதாக பாஜக நினைத்துக் கொண்டிருப்பது மாயை. சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு உரிய திருத்தங்கள் செய்யப்படாத வரை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம்' என்றுதெரிவித்துள்ளார். 

முன்னதாக, மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக சிவசேனை எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்ததற்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, உத்தவ் தாக்கரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.