ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சமஸ்கிருத மொழியை தினமும் பேசினால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்: பாஜக எம்.பியின் சர்ச்சை பேச்சு!

சமஸ்கிருத மொழியை தினமும் பேசினால் நரம்பு மண்டலம் பலப்படும் என்றும் உடலில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பை சரியான அளவில் வைத்திருக்கும் என்றும் பாஜக எம்.பி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2019, 5:20 am

DIN

சமஸ்கிருத மொழியை தினமும் பேசினால் நரம்பு மண்டலம் பலப்படும் என்றும் உடலில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்தலாம் என்றும் பாஜக எம்.பி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக இயங்கி வரும் மூன்று சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, வியாழக்கிழமை மக்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தாக்கல் செய்தார். விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

முன்னதாக, சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய பாஜக எம்.பி கணேஷ் சிங், 'சமஸ்கிருத மொழியை தினமும் பேசினால் நரம்பு மண்டலம் பலப்படும். உடலில் சர்க்கரை மற்றும் கொழுப்பை சரியான அளவில் வைத்திருக்கும். அமெரிக்க கல்வி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது' என்று கூறியுள்ளார். இவரது கருத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் பேசிய அவர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஆய்வின்படி, சமஸ்கிருதத்தில் கணினி நிரலாக்கங்கள் செய்யப்பட்டால், அது குறைபாடற்றதாக இருக்கும் என்றும் கூறினார்.

தொடர்ந்து, சில இஸ்லாமிய மொழிகள் உட்பட உலகில் 97 சதவீதத்திற்கும் அதிகமான மொழிகள் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டார். 

இதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி பேசுகையில், 'சமஸ்கிருத மொழி மிகவும் நெகிழ்வுத் தன்மை கொண்டது. ஒரே ஒரு வாக்கியத்தை பல வழிகளில் பேச முடியும். Cow, Brother போன்ற பல்வேறு ஆங்கிலச் சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவை. பழமையான மொழியை ஊக்குவிப்பதன் மூலமாக மற்ற மொழிகள் ஒருபோதும் பாதிக்கப்படாது' என்றும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.