தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

20 ஆண்டு கால நண்பரை கரம்பிடிக்கும் மூதாட்டி; கேரளாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

65 வயதான கேரளாவைச் சேர்ந்த லட்சுமி அம்மாள், 66 வயதான தனது 20 ஆண்டு கால நண்பர் மற்றும் காதலரை கைப்பிடிக்கிறார். 

News image
Updated On :18 டிசம்பர் 2019, 10:13 am

DIN

65 வயதான கேரளாவைச் சேர்ந்த லட்சுமி அம்மாள், 66 வயதான தனது 20 ஆண்டு கால நண்பர் மற்றும் காதலரை கைப்பிடிக்கும் நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நிகழவிருக்கிறது.

கேரளா திருச்சூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் 21 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவனை இழந்தார். லட்சுமி அம்மாள் கணவரின் உதவியாளராக வேலை செய்தவர் கோச்சானியன். கணவர் மறைந்த பிறகு லட்சுமி அம்மாளை கோச்சானியன் தான் கவனித்து வந்தார். லட்சுமி அம்மாளின் கணவர் மரணப்படுக்கையில் இருந்த போது, மனைவியை கவனித்துக்கொள்ளும்படி அவர் கோச்சனியனிடம் கூறிவிட்டு மறைந்தார். அதன்பேரில், கடந்த 21 ஆண்டுகளாக லட்சுமி அம்மாளை கவனித்து வருகிறார் கோச்சானியன்.

இவர்களின் 20 ஆண்டு கால நட்பு தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. தற்போது 65 வயதான லட்சுமி அம்மாள், 66 வயதான கோச்சானியனை திருமணம் செய்யத் தயாராகியுள்ளார். வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் திருமணமானது, அரசு முதியோர் இல்லத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து லட்சுமி அம்மாள் கூறுகையில், 'நாங்கள் நீண்ட காலமாக காதலித்து வருகிறோம். இறுதியாக திருமணம் நடக்க உள்ளது. இது 20 வருட உறவாகும். இந்த உறவு இறுதியில் திருமணத்தில் முடிவடைவது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறியுள்ளார். முதுமை காரணமாக இருவருமே தற்போது முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளனர். 

'எங்கள் விருப்பத்தை நனவாக்க எல்லோரும் எங்களுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கோச்சனியான் கூறினார். இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்துள்ள முதியோர் இல்ல கண்காணிப்பாளர் வி.ஜி.ஜெயகுமார், 'இந்தத் திருமணமானது மறக்கமுடியாத விழாவாக இருக்கும்' என்று  கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.