எந்த வங்கியாக இருந்தாலும் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளராக இருந்தால் போதும், ஆர்பிஐ அறிவித்திருக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
அதாவது, 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் என்இஎஃப்டி மூலம் கட்டணமின்றி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஆர்பிஐ வழிவகை செய்துள்ளது.
சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கு என்இஎஃப்டி மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்படும் அனைத்து விதமான கட்டணங்களையும் ரத்து செய்யுமாறு ஆர்பிஐ, அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இணையதளம் அல்லது செல்போன் செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்யுமாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம்,என்இஎஃப்டி மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய இதுவரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயலும் வகையில் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 16ம் தேதி முதல் என்இஎஃப்டி மூலம் 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


