தில்லியில் கடும் பனிமூட்டம்: 17 ரயில்கள் தாமதம்
தில்லி மற்றும் அருகில் உள்ள பகுதியில் கடும் பனிமூட்டம் காரணமாக 17


புது தில்லி: தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவிவருவதால் 17 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகின்றது. சாலைகளில்முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அந்தவகையில், ரயில் சேவையும் இன்று பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தில்லிக்கு வரவேண்டிய 17 ரயில்கள் சுமார் 4 மணி நேரத்திற்குப் பின்னர் இயக்கப்பட்டது.
அதன்படி, ரயில் 12801 (பூரியிலிருந்து புது தில்லி வரை) மூன்று மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டது. அதே நேரத்தில் 12397 (கயாவிலிருந்து புது தில்லி வரை) மூன்று மணி மற்றும் நாற்பது நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டது.
சென்னை-புது தில்லி எக்ஸ்பிரஸ் (12615) இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதேபோல், 12303 (ஹவுரா முதல் புது தில்லி வரை), 12721 (ஹைதராபாத் மற்றும் புது தில்லி இடையே) மற்றும் 14017 (ராக்ஸால் முதல் ஆனந்த் விஹார் வரை) உள்ளிட்ட 17 ரயில்களும் பனிமூட்டம் காரணமாகத் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...