அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தில்லி ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

தலைநகர் தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 

News image
Updated On :22 டிசம்பர் 2019, 6:32 am

DIN

தலைநகர் தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள சுமார் 3,000 பேருந்துகளில் இரண்டு லட்சம் பேர் வருகிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக தில்லி காவல்துறை, சிறப்பு கமாண்டோ படை மற்றும் பாஜக ஆகியன இணைந்து பணியாற்றியுள்ளன.

1,731 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் 40 லட்சம் குடும்பங்களின் நில உரிமைக்கான வீட்டுமனைப் பட்டா வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். 

அப்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களின் மொத்தம் 11 லட்சம் கையொப்பங்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் மேலும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.