தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர்களுக்கு நன்றி: ராகுல்

காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் நன்றி தெரிவித்தார்.

News image
Updated On :24 டிசம்பர் 2019, 7:36 am

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக தலைநகர் தில்லியில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் நன்றி தெரிவித்தார்.

இதுதொடர்பாக ராகுல் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டதாவது,

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இந்தியாவைப் பிளவுபடுத்த திட்டமிட்டு நடத்திய முயற்சி தான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி தலைநகர் தில்லியில் நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.