இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அங்குதான் இருக்கிறான் மசூத் அசார்; பிடித்துக் கொள்ளுங்கள்: இம்ரான் கானுக்கு பதிலடி கொடுத்த அம்ரீந்தர் சிங் 

உங்களுடைய மசூத் அசார் பஹவல்பூரில்தான் உள்ளார்; அங்கு சென்று பிடித்துக்கொள்ளுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:11 am

DIN

சண்டிகார்: உங்களுடைய மசூத் அசார் பஹவல்பூரில்தான் உள்ளார்; அங்கு சென்று பிடித்துக்கொள்ளுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த 14-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர், இந்த தாக்குதலில் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

அத்துடன் புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை எங்களிடம் இந்தியா வழங்கட்டும். நாங்கள் நடவடிக்கையை எடுப்போம். அதை விடுத்து இந்தியா ஏதாவது சாகசம் செய்ய நினைத்தால் தக்க பதிலடிகொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.   

இந்நிலையில் உங்களுடைய மசூத் அசார் பஹவல்பூரில்தான் உள்ளார்; அங்கு சென்று பிடித்துக்கொள்ளுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இம்ரான் கான் அவர்களே, உங்களுடைய மசூத் அசார் பஹவல்பூரில்தான் உள்ளார். பாகிஸ்தான் உளவுத்துறையின் பாதுகாப்புடன்தான் உள்ளார். அங்கு சென்று பிடித்துக்கொள்ளுங்கள். அதனை உங்களால் செய்ய முடியவில்லை என்றால், எங்களிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் உங்களுக்காக இப்பணியை செய்கிறோம். மும்பை தாக்குதலில் ஆவணங்கள் வழங்கப்பட்டு பாகிஸ்தான் செய்தது என்ன?”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.