பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

நாடாளுமன்றத் தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட  அரசியல்  கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் விரைவில்  ஆலோசனை 

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரம் ஆலோசனை நடத்தவுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2019, 4:41 pm IST

புது தில்லி: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரம் ஆலோசனை நடத்தவுள்ளது.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பினை மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று பரவலாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரம் ஆலோசனை நடத்தவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. .  

இந்த ஆலோசனையில் தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற நாட்கள் மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தலை  நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த கூட்டத்தினை இரண்டு நாட்களாக நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.

அதேசமயம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மார்ச் 4 - ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய உள்ள தேர்தல் ஆணையமானது, அங்கு மாநில காவல்துறை தலைஓவருடன் ஆலோசித்து தேர்தல் தேதிகள் முடிவு செய்யபப்ட்ட உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.