திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்களை பெயர்  கூறி வெளியேறச் சொன்ன வெங்கய்ய நாயுடு 

மாநிலங்களவையில் தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய தமிழக உறுப்பினர்களை மாநிலங்களவைத்  தலைவரான  துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பெயர்  கூறி வெளியேறச் சொன்ன சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

News image
Updated On :2 ஜனவரி 2019, 11:08 am

புது தில்லி: மாநிலங்களவையில் தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய தமிழக உறுப்பினர்களை மாநிலங்களவைத்  தலைவரான துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பெயர்  கூறி வெளியேறச் சொன்ன சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

புதன்கிழமையன்று மாநிலங்களவை கூடியதும் கர்நாடகாவின் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வந்தனர். இதன் காரணமாக அவை அடிக்கடி ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய தமிழக உறுப்பினர்களை மாநிலங்களவைத்  தலைவரான  துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பெயர்  கூறி வெளியேறச் சொன்ன சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

உணவு இடைவேளைக்குப் பிறகு மதியம் அவை கூடியதும், மாநிலங்களவைத்  தலைவரான  வெங்கய்ய நாயுடு தமிழகத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்களை பெயரைக் கூறி எழுப்பி, இன்று முழுவதும் அவையில் இருந்து வெளியேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார். 

அவ்வாறு கூறப்பட்டவர்களில் திமுகவின் கனிமொழி மற்றும் திருச்சி சிவா, அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் மற்றும் செல்வராஜ் ஆகியோர் அடங்குவர். 

அவ்வாறு உத்தரவிட்ட பிறகு அவை 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.