எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதல் நபர் விஜய் மல்லையா

வங்கிக் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2019, 12:26 pm

DIN

வங்கிக் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொருளாதாரக் குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யலாம் என்றும், மல்லையா மேல்முறையீடு செய்ய அவகாசம் ஏதும் அளிக்க முடியாது என்றும் மும்பை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தப்பியோடும் பொருளாதாரக் குற்றவாளிகளுக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த பிறகு, தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பணமோசடியில் ஈடுபட்டு பிரிட்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவை பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.

பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த இவ்வழக்கு மீதான விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி, விஜய் மல்லையாவை பொருளாதாரக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.

முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி பணமோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விஜய் மல்லையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.