மும்பை: ஓடும் ரயில் பயணிகள் ஏறி, இறங்குவதைத் தடுப்பதற்காக மேற்கு மண்டல ரயில்வே புது நடைமுறை ஒன்றைக் கொண்டு வர இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில்குறிப்பாக மும்பையில் மின்சார ரயில்கள் என்பது முக்கியமானதொரு போக்குவரத்து அம்சமாகும். அதேசமயம் ஓடும் ரயில்களில் பயணிகள் ஏறி இறங்குவதால் விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதும் தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது.
இந்நிலையில் ஓடும் ரயிலில் பயணிகள் ஏறி, இறங்குவதைத் தடுப்பதற்காக மேற்கு மண்டல ரயில்வே புது நடைமுறை ஒன்றைக் கொண்டு வர இருக்கிறது.
அதன்படி மின்சார ரயில்களின் கதவுகளில் நீல நிற விளக்குகள் பொருத்தப்படும் .ரயிலானது ஒரு குறிப்பிட்ட வேகத்தைப் பிடிக்கும்போது இந்த விளக்குகள் ஒளிரத் தொடங்கும். இது பயணிகள் ரயிலில் ஏறுவதோ இறங்குவதோ உயிருக்கு ஆபத்து என்று எச்சரிப்பதாக அமையும்.
இந்த எச்சரிக்கையானது ஒரு கூடுதல் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வினை பயணிகள் மனதில் உண்டாக்கி, அவ்வாறு செயல்படுவதைத் தடுக்கும் என்று கணிக்கப்படுகிறது.
தற்போது இந்த புதிய நீல நிற விளக்குகளை ரயில்களில் பொருத்தும் பணி தொடங்கியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டுவசதித் திட்டத்திற்காக 15 ஏக்கர் நிலத்தை கைபற்றிய மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ்!

”அட்லி படம் போல...!” அந்த மொழிதான் அவர்களுக்குப் புரியும்! முன்னாள் அமைச்சர் சிவசங்கர்

இரவு 10 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



