திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தேசிய அளவில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை; சீதாராம் யெச்சூரி

காங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி அமைவதற்கு வாய்ப்பில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைமுகமாகக் கூறியுள்ளார்.

News image
Updated On :15 ஜனவரி 2019, 12:47 am IST


காங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி அமைவதற்கு வாய்ப்பில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைமுகமாகக் கூறியுள்ளார்.
அண்மையில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் அமைச்சருமான நிருபம் சென்னுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்சிக்கு வந்திருந்த சீதாராம் யெச்சூரி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவரிடம், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஓர் அணியை உருவாக்குவதற்காக, காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு யெச்சூரி அளித்த பதில்: அரசியல் சூழ்நிலை, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே, காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை முதலில் மாநில அளவில் தொடங்கப்பட வேண்டும் என்றார் அவர்.
வரும் மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸையும், பாஜகவையும் வீழ்த்துவதற்காக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையையும் தொடங்கி விட்டனர். 
இந்த நிலையில்தான், காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தேசிய அளவிலான கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று யெச்சூரி மறைமுகமாகக் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமையும் கூட்டணி மூலமாக, மத்தியில் பாஜக அல்லாத மதச் சார்பற்ற, ஜனநாயக முன்னணி ஆட்சி அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.