ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: பாராமுல்லா மாவட்டத்தின் பீன்னர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குப் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் குறித்தும், அவர்கள் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

க்யூ.ஆா். கோட் மூலம் அரசு பள்ளியில் ஆன்லைன் மாணவா் சோ்க்கை: ஆசிரியா்களின் புதிய முயற்சி

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

வணிக சமையல் எரிவாயு விலை ரூ.46 உயர்வு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 1 2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு மகிழ்ச்சி!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


