புது தில்லி: வருடாந்திர தணிக்கையில் பணித்திறன் குறைவு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஐவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு வருடமும் வருடாந்திரத் தணிக்கை நடைபெறுவது வழக்கம். இதில் நிதி வரவு மற்றும் செலவு உட்பட பல்வேறு செயல்பாடுகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
அந்த வரிசையில் மத்திய பாதுகாப்புத்துறையின் குடிமைப்பணி அதிகாரிகள் சுமார் 500 பேரின் செயல்பாடுகளும் தணிக்கை செய்யப்பட்டது. 30 வருடப் பணி அனுபவத்துடன், 55 வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது தணிக்கைக்கு தகுதியாக வரையறுக்கப்பட்டது.
தணிக்கை முடிவுகளின் அடிப்படையில் திறம்படப் பணியாற்றவில்லை எனத் தெரிய வந்ததன் பேரில், ஐந்து உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வளிக்க, அந்த துறையின் அமைச்சர் அமைச்சர் நிர்மலா கடந்த செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல கடந்த ஆகஸ்ட் 2017-ல் ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 13 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புனித வெள்ளி - தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்

தமிழகத்தில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக முடித்துள்ளது! காட்பாடி அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


