திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது: தமிழக காங்கிரஸ் கண்டனம்  

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ்  தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 ஜூலை 2019, 6:47 pm IST

சென்னை: உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ்  தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தால் பல்வேறு வன்முறை கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பட்டியலின மக்கள், ஆதிவாசிகள், சிறுபான்மை சமூகத்தினர் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வாரணாசிக்கு அருகில் உள்ள சோனாபத்ரா மாவட்டத்தில் ஆதிவாசிகளின் நிலத்தை கைப்பற்ற 24 டிராக்டர்களில் வந்த வன்முறைக் கும்பல் 10 பேரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்திருக்கிறார்கள்.

சோனாபத்ரா படுகொலையை கேள்விப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச மாநில பொறுப்பாளருமான திருமதி. பிரியங்கா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக முயற்சி செய்திருக்கிறார். அவரையும் உடன் வந்த காங்கிரஸ் கட்சியினரையும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டதால், அவர் சாலை மறியல் செய்திருக்கிறார். பின்னர் அவர் தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இத்தகைய ஜனநாயக விரோதச் செயல் பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றிருப்பதை  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.