சென்னை: உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தால் பல்வேறு வன்முறை கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பட்டியலின மக்கள், ஆதிவாசிகள், சிறுபான்மை சமூகத்தினர் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வாரணாசிக்கு அருகில் உள்ள சோனாபத்ரா மாவட்டத்தில் ஆதிவாசிகளின் நிலத்தை கைப்பற்ற 24 டிராக்டர்களில் வந்த வன்முறைக் கும்பல் 10 பேரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்திருக்கிறார்கள்.
சோனாபத்ரா படுகொலையை கேள்விப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச மாநில பொறுப்பாளருமான திருமதி. பிரியங்கா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக முயற்சி செய்திருக்கிறார். அவரையும் உடன் வந்த காங்கிரஸ் கட்சியினரையும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டதால், அவர் சாலை மறியல் செய்திருக்கிறார். பின்னர் அவர் தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இத்தகைய ஜனநாயக விரோதச் செயல் பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



