தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முத்தலாக் மசோதா: மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்கள் வெளிநடப்பு 

முத்தலாக் மசோதா விவகாரத்தில் மாநிலங்களவையில் இருந்து அதிமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

News image
Updated On :30 ஜூலை 2019, 11:25 am

DIN

புது தில்லி: முத்தலாக் மசோதா விவகாரத்தில் மாநிலங்களவையில் இருந்து அதிமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் செவ்வாயன்று  மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவைத் மத்திய சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

முன்னதாக மக்களவையில் இம்மசோதா குறித்த விவாதம் நடைபெற்ற போது அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான தேனி ஓ.பி.ரவீந்திரநாத், முத்தலாக் சட்டத்தை ஆதரித்து பேசி வாக்களித்தார். இது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை அதிமுக மீது ஏற்படுத்தி இருந்தது.

அதேசமயம் செவ்வாய் மதியம் மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அதிமுக மாநிலங்களவை குழுத் தலைவரான நவநீதகிருஷ்ணன், 'இந்த மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்' என்று பேசினார்.

முன்னதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான எஸ்.ஆர். பாலசுப்ரமணியனும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முத்தலாக் மசோதா விவகாரத்தில் மாநிலங்களவையில் இருந்து அதிமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

மசோதா மீதான விவகாரத்தில் பேசிய அதிமுக எம்.பியான எஸ்.ஆர். பாலசுப்ரமணியன், 'இந்த மசோதாவின் ஒரு சில பிரிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இது சமூகத்தில் உண்டாக்க கூடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டு, சிறப்புக்குழுவுக்கு அனுப்ப வேண்டும' என்று வலியுறுத்தி விட்டு, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து அப்போது அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் வெளியேறினார்கள்.

எனவே இந்த மசோதா மீதான ஓட்டெடுப்பில் பங்கு பெற்று ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்காமல், விவாதம் நிறைவடையும் முன்னரே அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.