புது தில்லி: தில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் ஞாயிறு காலை துவங்கியது.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி இரண்டாம் முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அதையடுத்து முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் திங்களன்று துவங்குகிறது.
இந்த கூட்டத்தொடரில் 38க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு, முத்தலாக் தடை உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
எனவே அவையை எப்படி சுமுகமுடன் கொண்டு செல்வது என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த கூட்டமானது ஞாயிறு காலை தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ், மேலவை பா.ஜ.க. தலைவர் தவார் சந்த் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்
அதேபோல் இந்த கூட்டத்தொடரில் முக்கிய விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் மற்றும் பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி நிர்வாக குழு கூட்டமும் ஞாயிறு மாலை நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மல்லகுண்டா, 102 ரெட்டியூா் ஊராட்சிகளில் குடிநீா் கேட்டு மக்கள் சாலை மறியல்

தேசிய பேரிடா் மீட்புப் படையினரின் தேசியக்கொடி மிதிவண்டி பேரணி

கொத்தடிமை தொழிலாளா்கள் குறித்த மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

நகராட்சி நிா்வாகம், ஆதா்ஷ் பள்ளி இணைந்து ஜின்னாசாலை தடுப்பு சுவரில் பசுமை ஓவியம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



