/

ராகுலின் இங்கி. வங்கிக் கணக்கு இதுதான்! சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட தடயம் 

காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்தின் குடியுரிமையையும் பெற்றுள்ளதாக சுப்ரமணியன் சுவாமி, மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் தெரிவித்தார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:48 am

DIN

காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்தின் குடியுரிமையையும் பெற்றுள்ளதாக சுப்ரமணியன் சுவாமி, மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் தெரிவித்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் இரட்டை குடியுரிமை குறித்து 2 வாரங்களில் தெளிவான விளக்கம் தரும்படி மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, இங்கிலாந்து நாட்டின் வங்கிக் கணக்கு தொடர்பான தடயம் ஒன்றையம் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி புதன்கிழமை வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் பெயர் ரௌல் வின்ஸி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற பார்க்லீஸ் வங்கியில் ரௌல் வின்ஸி என்ற பெயரில் 504664922071640796 என்னும் இந்த வங்கிக் கணக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.