மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ராகுல் காந்தி தொடர்பாக புகார் தெரிவித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், பிரிட்டனில் செயல்படும் பேக்காப்ஸ் நிறுவனத்தின் 3 இயக்குநர்களில் ராகுல் காந்தியும் ஒருவர். கடந்த 2003ம் ஆண்டு இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த 2005, 2006ம் ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள வரவு செலவு அறிக்கைகளில், ராகுல் காந்தி 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி பிறந்தார் என்றும், அவர் பிரிட்டன் பிரஜை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டிருந்தார்.