மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

தேர்தல் வந்தவுடன் 'பூணூல்' அணிந்துகொள்வார் ராகுல்: ஸ்மிருதி இராணி

போருக்கு பயந்து வயநாடு சென்று பதுங்கிக்கொண்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குறித்து பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி சரமாரியாகத் தாக்கினார். 

News image
Updated On :11 மே 2019, 12:35 pm IST

போருக்கு பயந்து வயநாடு சென்று பதுங்கிக்கொண்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குறித்து பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி சரமாரியாகத் தாக்கினார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் கூறுகையில்,

பிரதமர் நரேந்திர மோடி இந்த நாட்டுக்காக உழைப்பவர். அதனால் தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவரை தறக்குறைவாக விமர்சித்து வருகின்றன. 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வந்தவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல், பூணூல் அணிந்துகொள்வார்.

அதுவரை அந்த 5 ஆண்டுகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று விட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் இங்கு வந்து பூணூல் அணிந்துகொண்டு, கங்கைக்கு சென்று ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்துவார். 

அவரது சகோதரி பிரியங்கா வதேரா, வாக்கு வங்கிக்காக மட்டுமே அயோத்தி செல்வார், ஆனால் ராமருக்கு தலைவணங்கி வழிபாடு நடத்த மாட்டார். 

சொந்த கட்சியினர் கேட்டுக்கொண்டும், போர் என்றவுடன் பயத்தில் வாராணசி மற்றும் அமேதி தொகுதிகளை புறக்கணித்துவிட்டு, ராகுல் அமேதி சென்று பதுங்கிக்கொண்டார். அவரது சகோதரி பிரியங்கா தேர்தலில் போட்டியிடவே மறுத்துவிட்டார் என்று விளாசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.