கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அயோத்தி வழக்கு: தீர்ப்பு அளித்த நீதிபதிகளுக்கு இரவு விருந்து அளிக்கும் தலைமை நீதிபதி!

பாபர் மசூதி நில வழக்கில் தீர்ப்பு வழங்கிய அரசியல் சாசன அமர்வு நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இரவு விருந்து அளிக்க திட்டமிட்டுள்ளார்.

News image
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
Updated On :9 நவம்பர் 2019, 2:53 pm

DIN


பாபர் மசூதி நில வழக்கில் தீர்ப்பு வழங்கிய அரசியல் சாசன அமர்வு நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இரவு விருந்து அளிக்க திட்டமிட்டுள்ளார்.

பாபர் மசூதி நில வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ஹிந்துக்களுக்கே சொந்தமானது என்றும், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் எஸ்ஏ பாப்தே, அசோக் பூஷண், டிஒய் சந்திரசூட் மற்றும் எஸ்ஏ நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 40 நாட்களாக மேற்கொண்டது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி விசாரணையை நிறைவு செய்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த அரசியல் சாசன அமர்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 1,045 பக்க தீர்ப்பை இன்று வழங்கியது.

எனவே, இந்த கடுமையான பணிச் சூழலில் இருந்து அயோத்தி வழக்கு அரசியல் சாசன அமர்வு நீதிபதிகளுக்கு சிறிய ஓய்வு அளிக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு இரவு விருந்து அளிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த விருந்து தில்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் அளிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.