ஜார்க்கண்ட் மாநிலம் உதயமான நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
ஜார்க்கண்ட் மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


புது தில்லி: ஜார்க்கண்ட் மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“ஜார்க்கண்ட் உதயமான நாளில் மக்களுக்கு வாழ்த்துகள். ஜார்க்கண்ட் துணிச்சலும், கருணையும் ஒருங்கிணைந்த மாநிலம். இந்த மாநிலத்தின் மக்கள் எப்போதும் இயற்கையுடன் இணைந்த நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பல துறைகளில் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். அவர்களது கடின உழைப்புக்கு நன்றி.
ஜார்க்கண்ட் தொடர்ந்து முன்னேற்றத்தின் புதிய உச்சத்தை அடையவும், பகவான் பிர்ஸா முண்டாவின் முன்னேற்றமடைந்த, மகிழ்ச்சியான மாநிலம் என்ற கனவு நனவாகவும் வாழ்த்துகள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...