மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நான் ஜிலேபி சாப்பிடுவதால்தான் காற்று மாசு அதிகரிக்கிறதா? ஜிலேபியை துறக்கத் துணிந்த கம்பீர்!

முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர் தான் ஜிலேபி சாப்பிடுவதால்தான் காற்று மாசு அதிகரிக்கிறதா என கேள்வி எழுப்பி விமரிசனங்களுக்குப் பதிலடி தந்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :18 நவம்பர் 2019, 5:38 pm

DIN


முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர் தான் ஜிலேபி சாப்பிடுவதால்தான் காற்று மாசு அதிகரிக்கிறதா என கேள்வி எழுப்பி விமரிசனங்களுக்குப் பதிலடி தந்துள்ளார்.

காற்று மாசு குறித்து விவாதிப்பதற்காக தில்லியில் கடந்த 15-ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் வர்ணனை செய்ய இந்தூருக்குச் சென்றுவிட்டார். அங்கு அவர் சக வர்ணனையாளர்களுடன் ஜிலேபி சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, காற்று மாசு குறித்து கூட்டத்தைப் புறக்கணித்து, வர்ணனையாளர் பணிக்குச் சென்றதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமரிசனங்கள் எழுந்தது. இதன் நீட்சியாக கௌதம் கம்பீர் காணவில்லை என்றும், கடைசியாக இந்தூரில் ஜிலேபி சாப்பிடும்போது பார்த்தது என்றும் அவரது புகைப்படங்கள் கூடிய சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க நாடாளுமன்றம் வந்திருந்த கௌதம் கம்பீர் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் ஜிலேபி சாப்பிடுவதால்தான் தில்லியில் காற்று மாசு அதிகரிக்கிறது என்றால் காலம் முழுவதும் நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்திவிடுகிறேன். காற்று மாசு பிரச்னைக்கு தில்லியின் எம்பி.,யாக 5 மாதங்களில் நான் ஆற்றிய பணியே, இவ்விவகாரத்துக்கு நான் அளிக்கும் முக்கியத்துவத்துக்கு சாட்சி.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் ஆட்டத்துக்கு வர்ணனை செய்ய வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்ததால் அந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. ஆம் ஆத்மி என் மீது தாக்குதல் நடத்துவதில் கவனத்தை செலுத்துவதைவிட காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

நகர்ப்புற மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் இருக்கும் ஒரே மக்களவை உறுப்பினர் கௌதம் கம்பீர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.