தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

'புதிய' இந்தியாவில், லஞ்சம் மற்றும் சட்டவிரோத ஆணையங்கள்: ராகுல்

ரிசர்வ் வங்கி விதிகளை மத்திய அரசு மீறியதாக வெளியான தகவல் தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார். 

News image
Updated On :19 நவம்பர் 2019, 4:26 am

DIN

தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி விதிகளை மத்திய அரசு மீறியதாக வெளியான தகவல் தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார். அதில், 'புதிய' இந்தியாவில், லஞ்சம் மற்றும் சட்டவிரோத ஆணையங்கள் தான் தேர்தல் பத்திரங்கள் என்று அழைக்கப்படுவதாக சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

"பாஜக பெட்டகத்தில் கறுப்புப் பணம்" நுழைய தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி விதிகளை மத்திய அரசு மீறியுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் திங்கள்கிழமை குற்றம்சாட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இதுதொடர்பாக ராகுல் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, 'புதிய' இந்தியாவில், லஞ்சம் மற்றும் சட்டவிரோத ஆணையங்கள் தான் தேர்தல் பத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன, என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேராவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.