எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்த ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News image
ஜம்மு காஷ்மீர்
Updated On :21 நவம்பர் 2019, 7:53 am

DIN


ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கும் மனுதாரரின் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் மிஸ்டர் மேத்தா நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். நீங்கள் தாக்கல் செய்யும் விளக்க-பிரமாணப் பத்திரம், எந்த முடிவையும் எட்ட உதவாது. எனவே, இந்த வழக்கில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது போன்ற எண்ணத்தை உருவாக்கிவிட வேண்டாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

முன்னதாக, மனுதாரர், காஷ்மீரில் கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்கும் பல விஷயங்கள் தவறானவை என்று மேத்தா கூறினார்.

மேலும் நீதிபதிகள் கூறியதாவது, நாங்கள் எந்த தடைக்காவல் குறித்தும் பேசவில்லை, தற்போது அனுராதா பாசின், குலாம் நபி ஆசாத் ஆகியோர் காஷ்மீரில் மக்கள் சுதந்திரமாக நடமாடவும், ஊடகங்களுக்கு இருக்கும் தடை குறித்து தொடர்ந்த மனுக்களை மட்டுமே விசாரிக்கிறோம் என்றும் குறிப்பிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.