காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்த ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.









