ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது: மக்களவையில் ஓங்கி ஒலித்த மத்திய அமைச்சரின் குரல்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக மக்களவையில் கேரள எம்பியின் கேள்விக்கு பதிலளித்த ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

News image

mullai_periyar_dam

Updated On :21 நவம்பர் 2019, 8:10 am

DIN


புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக மக்களவையில் கேரள எம்பியின் கேள்விக்கு பதிலளித்த ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது கேரள மாநிலம் இடுக்கி காங்கிரஸ் எம்.பி.யான டீன் குரியகோஸ் எழுப்பிய கேள்வியாவது, முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? அணையில் உடைப்பு ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும், கேரள மக்களுக்கு பேரிடராக அமையும் என்பதால், இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு விளக்கம் அளித்த மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முல்லைப் பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாகவே உள்ளது.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன்பும், பின்பும் அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் பாதுகாப்புத் தன்மை உறுதி செய்யப்படுகிறது.

அதன்படி, கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அணையில் மேற்கொண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுதான் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பதில் அளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.