ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் ஃபட்னவீஸூக்கு நாக்பூர் நீதிமன்றம் சம்மன்! 

தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு எதிரான இரண்டு கிரிமினல் வழக்குகள்  குறித்த தகவல்களை மறைத்ததாக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு நாக்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

News image

தேவேந்திர ஃபட்னவீஸ்

Updated On :29 நவம்பர் 2019, 10:58 am IST

தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு எதிரான இரண்டு கிரிமினல் வழக்குகள்  குறித்த தகவல்களை மறைத்ததாக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு நாக்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

மகாராஷ்டிராவில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நேற்று சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். அவருடன் சிவசேனை கட்சியைச் சேர்ந்த 6 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். 

இந்நிலையில்,  மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் ஃபட்னவீஸூக்கு நாக்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 1996 மற்றும் 1998ம் ஆண்டுகளில் ஃபட்னவீஸூக்கு எதிராக மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், ஃபட்னவீஸ் தனது தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் இந்த தகவலை வெளியிடவில்லை என்று வழக்கறிஞர் சதீஷ் என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்து மும்பை நீதிமன்றம் உத்தரவிடவே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நாக்பூர் நீதிமன்றம் தரப்பில் இருந்து  ஃபட்னவீஸூக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. நாக்பூர் போலீசார் இன்று  ஃபட்னவீஸூன் வீட்டிற்குச் சென்று சம்மனை வழங்கியுள்ளனர். விரைவில் ஃபட்னவீஸ் இதற்கு பதில் அளிப்பார் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.