காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்கும் நடைமுறைகளுக்குத் தடை விதித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த தினவிழா இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு சார்பிலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படுவதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று அறிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் பேசிய அவர், 'காந்தி ஒரு உண்மையான சுற்றுச்சூழல் ஆர்வலர். பட்டாசு வெடிப்பது சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. எனவே, காந்தி ஜெயந்தி விழாவில் பட்டாசு வெடிப்பதை அனைவருமே தவிர்க்க வேண்டும் என்று நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அரசு ஊழியர்கள் இதை கவனத்தில் கொண்டு மற்றவர்களிடமும் எடுத்துரைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளுக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் முக்கியத்துவம் அளித்து வருவதாக கோவா அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அரசு அலுவலகங்களில் ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து சமீபத்தில் கோவா அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
கோவா அரசு அலுவலங்களில் அக்.2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை!
பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகளை விநியோகிக்கும் டெல்லி போலீசார்! மக்கள் அமோக வரவேற்பு
'தினமும் ஆபிஸூக்கு லேட்டா போறீங்களா?' - போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் 'மைக்ரோ மொபிலிட்டி'
அண்டார்டிகாவில் 315 பில்லியன் டன் ராட்சத பனிப்பாறை உடைந்தது; 50 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு!
'தவறு நடந்தா தைரியமா தட்டிக் கேளுங்க..' எடுத்துக்காட்டான கேரளத்து சிங்கப் பெண்!