கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நிலவின் தென் துருவத்தை படம்பிடித்த சந்திரயான்-2 ஆர்பிட்டர்

இந்த படம் நிலவில் கற்பாறைகள் மற்றும் சிறிய பள்ளங்களையும் காட்டுகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 அக்டோபர் 2019, 7:34 am

DIN

நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆா்பிட்டா் பகுதி, புவி காந்த மண்டலம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த புவி காந்த மண்டலம்தான், விண்வெளி எரிகற்கள் மற்றும் பிற தாக்கங்களிலிருந்து பூமியை வேலியாகப் பாதுகாத்து வருகிறது. 

இந்நிலையில், சந்திரயான் -2 ஆர்பிட்டரில் பொருத்தப்பட்ட உயர்தர கேமரா (ஓ.ஹெச்.ஆர்.சி) மூலம் படம்பிடித்த நிலவின் மேற்பரப்பின் படங்களை வெளியிட்டுள்ளது.

இஸ்ரோவின் கூற்றுப்படி, சந்திரனின் மேற்பரப்பில் இருந்து 100 கி.மீ உயரத்தில் இருந்து ஆர்பிட்டர் எடுத்த படங்கள் போகுஸ்லாவ்ஸ்கி இ பள்ளத்தின் ஒரு பகுதியாகும், இது சுமார் 14 கி.மீ விட்டம் மற்றும் 3 கி.மீ ஆழம் கொண்டதாக அளவிடப்பட்டுள்ளது. இவை நிலவின் தென் துருவத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ளது.

இந்த படம் நிலவில் கற்பாறைகள் மற்றும் சிறிய பள்ளங்களையும் காட்டுகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.