ஆட்சியமைக்க உரிமைகோரினார் மனோகர் லால் கட்டர்
ஆட்சியமைக்க உரிமைகோரினார் மனோகர் லால் கட்டர்

ஹரியாணாவில் ஆட்சியமைக்க உரிமைகோரினார் மனோகர் லால் கட்டர்

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, துஷ்யந்த் சௌதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது.
Published on


சண்டிகர்: ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, துஷ்யந்த் சௌதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது.

மத்திய அமைச்சர்கள் ரவி ஷங்கர் பிரசாத், ஹரியாணா பாஜக தலைவர் சுபாஷ் பராலா, ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சௌதாலா உள்ளிட்டோருடன் இன்று ஹரியாணா ஆளுநரை நேரில் சந்தித்த மனோகர் லால் கட்டர் இரு கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார்.

முன்னதாக இன்று நடைபெற்ற  பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஹரியாணா பாஜக சட்டசபைக் குழுத் தலைவராக மனோகர் லால் கட்டர் தேர்வு செய்யப்பட்டார்.

90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 6 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. ஜேஜேபி தலைவா் துஷ்யந்த் சௌதாலாவுக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com