பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

2012 தில்லி நிர்பயா சம்பவம்: பாலியல் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது எப்போது?

இன்னும் 7 நாட்களுக்குள், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைக்கப்படவில்லை என்றால், 2012 நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று திகார் சிறைத் துற

News image

நிர்பயா சம்பவம்

Updated On :31 அக்டோபர் 2019, 12:27 pm

இன்னும் 7 நாட்களுக்குள், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைக்கப்படவில்லை என்றால், 2012 நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று திகார் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குற்றவாளிகளுக்கு திகார் சிறைத் துறை நிர்வாகம் ஒரு நோட்டீஸை அளித்துள்ளது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 4 பேரில் 3 பேர் திகார் சிறையிலும், ஒருவர் மண்டோலி சிறையின் 14வது அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை தில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துவிட்டது.

ஆனால், தீர்ப்பை மறுசீராய்வு செய்யவோ, தண்டனையை நிறுத்தி வைக்கவோ குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தை நாடவில்லை. எனவே, குற்றவாளிகள் நான்கு பேரும் 7 நாட்களுக்குள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி, அதற்கு பதில் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான நோட்டீஸ் குற்றவாளிகளிடம் அக்டோபர் 28ம் தேதி சிறைத் துறை அளித்துள்ளது. 

இதன் பிறகு, குற்றவாளிகள் 4 பேரும் பதற்றத்தோடு காணப்படுவதாக சிறைத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை குறிப்பிட்ட 7 நாட்களுக்குள் கருணை மனு தாக்கல் செய்யப்படாவிட்டால், சட்டப்படி, குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகளில் சிறைத்துறை ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.