விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

பஞ்சாப் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: உயிரிழந்தோர் 23ஆக உயர்வு

பஞ்சாப் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. 

News image
Updated On :5 செப்டம்பர் 2019, 4:54 am

பஞ்சாப் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. 

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தின் படாலா பகுதியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த பணியாளர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். 27 காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

குடியிருப்புப் பகுதிகளுக்கிடையே இந்தத் தொழிற்சாலை உள்ளதால் அருகில் உள்ள சில வீடுகளிலும் விபத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில முதல்வர் அமரீந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவருக்கு ரூ.25ஆயிரமும் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.