நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புவியீர்ப்பு விசையை கண்டறிந்தவர் ஐன்ஸ்டீன்?: அமைச்சர் பேச்சால் சர்ச்சை

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன், புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்ததாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வாய்தவறிக் கூறியது  சமூக வலைதளங்களில் கிண்டலாக விமர்சிக்கப்பட்டது. 

News image
Updated On :12 செப்டம்பர் 2019, 9:47 pm

DIN


பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன், புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்ததாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வாய்தவறிக் கூறியது  சமூக வலைதளங்களில் கிண்டலாக விமர்சிக்கப்பட்டது. 
விஞ்ஞானி நியூட்டன்தான் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் என்பதே சரியான தகவலாகும். இந்நிலையில், தில்லியில் வர்த்தக வாரியத்தின் இரண்டாவது கூட்டத்தில் பியூஷ் கோயல் பேசும்போது, நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து குறிப்பிட்டார். தொலைக்காட்சிகளில் பொருளாதாரம் பற்றி காண்பிக்கப்படும் மதிப்பீடுகளைக் கண்டு குழம்ப வேண்டாம். ரூ.350 கோடி பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க வேண்டுமானால் 12 சதவீத வளர்ச்சியைக் காண வேண்டும். ஆனால் தற்போது பொருளாதாரம் 6 முதல் 7 சதவீதம் அளவுக்கே வளர்கிறது. இந்தக் கணக்குகளின் உள்ளே போக வேண்டாம். இதுபோன்ற கணக்குகள் புவியீர்ப்பு விசை தத்துவத்தைக் கண்டுபிடிப்பதில் ஐன்ஸ்டீனுக்கு உதவி விடவில்லை என்று அவர் தெரிவித்தார்.
பியூஷ் கோயல் வாய்தவறி இவ்வாறு கூறியதை சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்தனர். இது தொடர்பாக காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவிக்கையில், முன்னாள் நிதியமைச்சரும் இந்நாள் வர்த்தக அமைச்சருமான பியூஷ் கோயல் கூறியது சரிதான். புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் தேவைப்படவில்லை. 
நியூட்டனுக்குதான் அது தேவைப்பட்டது என்று கேலியாகக் கூறியிருந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையில் பொருளாதாரக் கணக்கு மோசமாக இருப்பதை உணர மத்திய அரசு தன் தலையில் ஆப்பிள் பழம் விழ வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியல்லை. தொலைதூரக் கனவுகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக எதார்த்த நிலை மீது அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.