பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அரசிடம் சிறப்பு உத்தி: வி.கே.சிங் தகவல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அரசிடம் சிறப்பு உத்தி: வி.கே.சிங் தகவல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு சிறப்பு உத்தியை வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு சிறப்பு உத்தியை வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
அவர் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது அவரிடம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடவடிக்கை எடுக்க முப்படைகளும் தயார் என்றும், ஆனால் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசுதான் என்றும் ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்து வி.கே.சிங் கூறுகையில் இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேச முடியாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக அரசு சிறப்பு உத்தியை வைத்துள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com