மாதத்துக்கு நூறு, இருநூறு என வரும் சிலிண்டர் மானியத்துக்காக ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கிவிட்டு, ஏழை, எளிய மக்கள் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல, அந்த இரு நூறு ரூபாயைப் பெற தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பாக ரூ.5 ஆயிரம் அளவுக்கு இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லை என்றால் அபராதம் வசூலிக்கப்படும் என்று பொதுமக்களை, வங்கிகள் படுத்தும் பாட்டைப் பார்க்கும் போது ஒரே ஒரு வங்கிக் கணக்குக்கே இந்த அளவுக்கு சிரமப்படும் ஏழை மக்கள், 317 வங்கிக் கணக்குகளை வைத்துக் கொண்டு சிவக்குமார் வங்கிகளிடம் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டிருப்பாரோ என்று நினைத்து கவலையில் ஆழ்ந்து விடும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.