மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆசை, விருப்பம் இதுவாம்!

இன்று ஹிந்தி மொழி தினம் என்பதால் அது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் ஏராளமான ஹிந்தி பதிவுகளை இட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆசை, விருப்பம் இதுவாம்!
Published on
Updated on
1 min read

இன்று ஹிந்தி மொழி தினம் என்பதால் அது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் ஏராளமான ஹிந்தி பதிவுகளை இட்டுள்ளார்.

அவர் கூறியிருக்கும் விஷயங்களில் முக்கிய விஷயம் என்னவென்றால், இன்று ஹிந்தி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் நான் நாட்டு மக்களுக்கு ஒரு  கோரிக்கையை வைக்கிறேன். அதாவது, அவரவர் அவருடைய தாய்மொழியில் பேசுவது போல, அதனுடன் ஹிந்தியையும் கற்று அதில் பேசுவதன் மூலம் இந்தியா முழுவதும் ஒரே மொழியாக ஹிந்தி அமைந்துவிடும். அனைத்து திசைகளிலும் பேசப்படும் மொழியாக ஹிந்தி மாறிவிடும். அதன் மூலம் சர்தார் படேல் கண்ட கனவு நிறைவேறும்.

இந்தியா பல மொழி பேசும் நாடுதான். ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் உண்டு. ஆனால், நாடு முழுவதும் ஒரே மொழி பேசும் போது, சர்வதேச அளவில் நமது இந்தியா அறியப்படும். அதுமட்டுமில்லாமல், அதிக மக்களால் பேசப்படும் மொழியாகவும் ஹிந்தி மாறும் என்றும் அமித் ஷா தனது விருப்பத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com